சென்னை மாநகராட்சியின் (Chennai Corporation) கீழ் செயல்படும் நாய் இன கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளர் (Animal Birth Control center Helpers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விலங்கு நல ஆர்வலராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/pdf/Applications.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai –600003.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.