New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
சென்னை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடம்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை பெண்கள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர்கள் (Case worker) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் ஒரு வருடம் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 600001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.