பெருங்களத்தூர், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்... சென்னையை சுற்றி 7 புதிய கலை- அறிவியல் கல்லூரிகள்

வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் உளவியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க 36 கல்லூரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றனர்.

வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் உளவியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க 36 கல்லூரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
college

college

2023-24 கல்வியாண்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பொறியியல் கல்லூரிகளை நடத்தும் இரண்டு கல்வி சார்ந்த அறக்கட்டளைகள், ஸ்ரீபெரும்புதூர், நெமிலி, கும்மிடிப்பூண்டி, புதிய பெருங்களத்தூர், புதூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

மேலும், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் உளவியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க 36 கல்லூரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதால், தற்போதுள்ள சென்னை கல்லூரிகளில் 5,000 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

"பல்கலைக்கழகத்தின் ஒரு குழு புதிய கல்லூரிகளுக்குச் சென்று அனுமதி அளிப்பதற்கு முன், வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களைச் சரிபார்க்க வேண்டும்" என்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் டீன் (பொறுப்பு) ஆர் ரங்கராஜன் கூறினார்.

Advertisment
Advertisements

புதிய கல்லூரிக்கான அனுமதி பெற, அந்த கல்லூரியானது சென்னையின் எல்லைக்குள் இருந்தால் குறைந்தபட்சம் மூன்று ஏக்கர் மற்றும் நகர எல்லைக்கு வெளியே ஐந்து ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.

ஐந்து வகுப்பறைகள், ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் கேன்டீன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலான விண்ணப்பங்கள், பி.காமின் வெவ்வேறு ஸ்ட்ரீம்களைத் தொடங்குவதற்கு அடுத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புகளைத் தொடங்குவதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

"கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 25 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்ட போதிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்னும் தேவை உள்ளது," என்று ரங்கராஜன் கூறினார்.

"பல்கலைக்கழகங்களும், மாநில அரசுகளும் மக்கள்தொகைப் பங்கீட்டைப் பார்த்து புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தர்மபுரி போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் புதிய கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்" என்று கல்வி ஆலோசகர் டி.நெடுஞ்செழியன் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Educational News Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: