Advertisment

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் – சி.இ.ஓ சுற்றறிக்கை

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம்; தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை

author-image
WebDesk
New Update
teacher

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம்; தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைப்படி, பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் நகராட்சி / அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 

தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள எவ்வித அறிவிப்பும் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்படாததால் தற்காலிக ஆசிரியர்களை (கடந்த ஆண்டுகளில் பணியாற்றியவர்கள் மற்றும் புதிய ஆசிரியர்கள் எவரும்) நியமனம் செய்ய வேண்டாம் என அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Teacher Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment