Advertisment

தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tiruppur Government school

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisment

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்க்கல்வி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: “அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். 

மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment