டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை எழுத 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 113 மையங்களில் 33,490 பேர் எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குத் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் காலை 9 மணிக்குப் பிறகு வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே மணிக்கூண்டு, தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் 2 நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என்றனர்.
தாமதத்திற்கு மன்னித்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி மன்றாடினார். வேறு வழியே தெரியாத அங்கு இருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் உங்களை அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் என் வேலையே போய்விடும் என்று கெஞ்சினார். காவலரின் நிலைமைய உணர்ந்த மாணவி சோகத்துடன் திரும்பிச் சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“