Advertisment

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு : முடிவுகள் வெளியாவது எப்போது?

Tamil Nadu Class 12 result: மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை, அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் பலர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
12th exam

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இருந்தபோதிலும் மறுதேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாதநிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டநிலையில், 24ம் தேதி நடந்த இறுதித்தேர்வை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத முடியவில்லை. இதன்காரணமாக, இதற்கான மறுதேர்வு, இம்மாதம் (ஜூன்) 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11ம் வகுப்பு மறுதேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், 12ம் வகுப்பு மறுதேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

விடைத்தாள் திருத்தும் பணி : ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் நடைபெற்றது.48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்துள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணியானது 10 நாட்களுக்குள் நிறைவடையும். ஜூன் 20ம் தேதிக்கு பிறகு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவுற்ற நிலையில், 11ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியுள்ளதாக பள்ளிகல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் : மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை, அதேபோல் ஒவ்வொரு தேர்விலும் பலர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மறுதேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் ஹால் டிக்கெட் பெற மாணவர்கள் முன்வராத நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஆகலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamilnadu Corona Virus Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment