பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜியா தனது உயர் கல்வியைத் தொடர திட்டமிட்டுள்ளார். "நான் பயோ-மேக்ஸ் பிரிவை எடுக்கிறேன், ஏனெனில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற விரும்புகிறேன். மூத்த சகோதரி கணிதத்துடன் கணினி அறிவியல் படிக்கிறார். ஏனெனில் அவர் JEE தேர்வில் வெற்றி பெற விரும்புகிறார்" என்று ஜியா கூறினார். 5 குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு அறை உள்ள வீட்டில் ஜியா வசிக்கிறார்.
அவரது தந்தை மாதத்திற்கு சுமார் ரூ.
10,000 மட்டுமே சம்பாதிக்கிறார், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவசக் கல்வி மற்றும் உணவு உதவி அவரது குடும்பத்திற்கு உதவியாக இருந்துள்ளது. "மதிய உணவுத் திட்டம், இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் எல்லாமே நான் நன்றாகப் படிக்க உதவின," என்று ஜியா கூறினார். ஜியாவின் தமிழ் உச்சரிப்பும் சரளமும் ஒரு தாய்மொழி பேசுபவரின் திறமைக்கு நிகராக உள்ளது.
ஜியாவின் தமிழ் ஆசிரியை கீதா கூறுகையில், "அவர் பேசுவதைக் கேட்டால் அவர் பீகாரைச் சேர்ந்தவர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்." தமிழ் பாடத்திட்டத்தில் உள்ள இலக்கணம், இலக்கியம், கவிதை மற்றும் கட்டுரை ஆகியவற்றை அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அறிவியல் ஆசிரியை ஆனந்தி, அந்தப் பெண் புத்திசாலியாகவும், கடினமாகப் படிப்பவராகவும் இருந்தார் என்று கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/4db3681c-90d.jpg)
"எனக்கு ஆங்கிலத்துடன் தமிழும் மிகவும் எளிதான பாடமாக இருந்தது. நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசி வருகிறேன், எழுதி வருகிறேன்," என்று கூறிய ஜியா, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் தமிழைத் தொடர்ந்து படிப்பேன் என்றார்.
ஜியாவைப் போலவே, அவரது மூத்த சகோதரி 12-ம் வகுப்பு படிக்கும் ரியா குமாரி மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் தங்கை சுப்ரியா குமாரி ஆகியோரும் சரளமாக தமிழ் பேசுகிறார்கள். அவரது சகோதரி ரியா கூறுகையில், அவர்கள் வீட்டில் மற்றும் கடைக்காரர்களிடம் பெரும்பாலும் தமிழில்தான் பேசுவதாகக் கூறினார். "வெகு காலத்திற்கு முன்பே தமிழ் எங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது," என்று கூறினார்.
ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி தனது குழந்தைகளைப் போல சரளமாக தமிழ் பேசவில்லை என்றாலும், தனது குடும்பத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர் தான்தான் கடைசியாக இருப்பார் என்று அவர் உறுதியாக நம்புகிறார். "எனது மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. எனது 3 குழந்தைகளும் தொழிற்கல்வி படிப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
நன்றி: times of india