ஐஐடி-யில் இயங்கும் தனியார் பள்ளிகளை நிறுத்துங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம்

தனியார் அல்லது தனியார் பங்களிப்போடு  உருவாக்கப்பட்ட  பள்ளிகளால்  ஐஐடி கருவூலத்திற்கு ஏற்பட்ட உண்மையான இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.

தனியார் அல்லது தனியார் பங்களிப்போடு  உருவாக்கப்பட்ட  பள்ளிகளால்  ஐஐடி கருவூலத்திற்கு ஏற்பட்ட உண்மையான இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
private schools in IITs,IITs,private schools, கேந்திய வித்யாலயா,

private schools in IITs,IITs,private schools, கேந்திய வித்யாலயா,kendra vidyalaya to replace private schools in IIT

நாட்டின் பல ஐ.ஐ.டி உயர்க்கல்வி நிலைய வளாகத்திற்குள் இயங்கும் தனியார் பள்ளிகளை, கேந்தியா வித்யாலயா பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 2016ம் ஆண்டு  ஜூலை மாதம் , ஐஐடி வளாகத்திற்கு இயங்கும் தனியார் பள்ளிகளை படிப்படியாக குறைத்து, அனைத்து பள்ளிகளையும் கேந்திரியா வித்யாலயா மாற்றுவதற்கான அறிவிப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பு நடைமுறைபடுத்தப்படாமல் இருப்பதால், ஐ.ஐ.டி மண்டியின் முன்னாள் ஊழியரும், சமூக ஆர்வலருமான சுஜீத் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் .

publive-image சுஜீத் சுவாமி

Advertisment
Advertisements

 

சுஜீத் சுவாமி தனது மனுவில், தனியார் அல்லது தனியார் பங்களிப்போடு  உருவாக்கப்பட்ட  பள்ளிகளால்  ஐஐடி கருவூலத்திற்கு ஏற்பட்ட உண்மையான இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளை தங்கள் வளாகங்களைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக ,சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி.களிடமிருந்து வணிக சந்தை விகிதங்களில் வருவாய் இழப்பை வசூலிக்கப்படவேண்டும்  என்றும் கோரியுள்ளார்.

Iit

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: