/indian-express-tamil/media/media_files/2025/09/03/examination-department-2025-09-03-18-55-53.jpg)
2014-16 தனித் தேர்வர்கள் கவனத்திற்கு... உரிமை கோரப்படாத +2 மார்க் சீட்கள் அழிப்பு; டி.ஜி.இ. முடிவு
பள்ளிப்படிப்பை முறையாக முடிக்காதவர்களும், கல்வியை இடையில் நிறுத்தியவர்களும், முதல்முறையாகப் பொதுத்தேர்வை எழுத விரும்புபவர்களும் தனித்தேர்வர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்காகவே, அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) 8, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது.
​அழிப்புக்கான அறிவிப்பு
​தற்போது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தனித்தேர்வர்கள் எழுதிய பிளஸ்-2 (Plus Two / 12-ஆம் வகுப்பு) மதிப்பெண் பட்டியல்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
​இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சசிகலா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வு மற்றும் துணைத் தேர்வுகளில் தனித்தேர்வர்கள் எழுதிய, உரிமைக் கோரப்படாத (Unclaimed) மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.