திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலை வாய்ப்பு; 8 முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 23
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM – 34, OC -32
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
இரவுக் காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM – 34, OC -32
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 37, MBC/BC/BCM – 34, OC -32
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil