/tamil-ie/media/media_files/uploads/2022/12/tn-govt-jobs-1.jpg)
tn govt jobs
ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையில் செவிலியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத்துறையில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: UPSC, JEE, GATE: உலகின் கடினமான தேர்வுகளாகக் கருதப்படுவது ஏன்?
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 150
கல்வித் தகுதி : Diploma in GNM/ BSC., (Nursing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2023/01/2023011995.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம் - 638012
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2023/01/2023011995.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.