New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!
ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கராத்தே/ சிலம்பம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கராத்தே (Black Belt) பட்டயப்படிப்பு (Diploma) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 9000
உடற்கல்வி ஆசிரியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை உடற்கல்வி (B.P.Ed) பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 6வது தளம், ஈரோடு - 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.