New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் (Counselor) பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆற்றுப்படுத்துநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: உளவியல் அல்லது ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ. 1000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயர விபரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம் (New Building), 6 ஆவது தளம், ஈரோடு - 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.