New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/a6V9iMaRkQNYx1X5VNFL.jpg)
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
சீருடையுடன் மாணவர்கள் சிலர் பிரம்பால் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் கேப்சனில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செங்கல்பட்டில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
வைரலாகும் தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, தல மகேஷ் (Thala Mahesh) என்ற ஃபேஸ்புக் பயனர், வைரலாகும் அதே வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், “புதுச்சேரி மாநிலம் அரியூரில் நடந்த சம்பவம் ஆசிரியர்கள் மறுபடியும் பிரம்பை கையில் எடுக்க முழு சுதந்திரம் கொடுக்கனும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி வைரலாகும் வீடியோ தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (Indian Express Tamil) செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “புதுச்சேரியை அடுத்த அரியூரில் இயங்கி வரும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில், கடுமையாக ஒருவருக்கொருவர் பேசியும் கைகளால் தாக்கிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் மாணவர்கள் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, இந்த காணொலி இணையத்திலும் வைரலாக வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை தினமலர் ஊடகமும் 2024 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
இறுதியில் நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக வைரலாகும் வீடியோ, 2024 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.