ஃபீஞ்சல் புயல் காரணமாக கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டும், பள்ளிகள் நடத்தப்பட்டும் வந்தது.
மழை காரணமாக கல்லுாரிகளில் நடந்து வந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 12ம் தேதி நடக்கவிருந்த தேர்வு வரும் ஜன.4ம் தேதியும், 13ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜன.6ம் தேதி நடக்கும் என கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“