Advertisment

அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு; சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழன் விடுமுறை

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு; சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு

author-image
WebDesk
New Update
இன்று முதல் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்: மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வாழ்த்து!

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு; சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

வங்கக் கடலில் உருவான 'மிக்ஜாம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் இன்னும் ஒரு சில பகுதிகளில் தேங்கியுள்ளதால், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

இந்தநிலையில், தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது. ஆனால், மழை பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்திட அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 7, 8) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Rain exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment