/tamil-ie/media/media_files/uploads/2022/06/Result.jpg)
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் தற்காலிகமான மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூன் 24) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
தமிழகத்தில் 10- மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
மாணவர்களின் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து கல்லுரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக வரும் ஜூன் 24-ந் தேதி முதல் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (ஜுன் 24) மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.