படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. உளவுத்துறையில் 1054 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.(www.mha.gov.in) அல்லது (www.ncs.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுக் குறித்த முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.1054 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மற்ற விபரங்கள்:
ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 20, 2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நவம்பர் 10, 2018 தேதிக்குள் அனுப்பபட்டிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான கடைசி நாள்- நவம்பர் 10, 2018 .
விண்ணப்ப கட்டணம் .
பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 கட்டணம். எஸ்.சி/ எஸ்.டி, முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை