IBPS clerk 2020: பொதுத்துறை வங்கிகளில் 12000 க்கும் மேற்பட்ட கிளார்க் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது ஐபிபிஎஸ் என்றழைக்கப்படும் வங்கி பணியாளர்கள் தேர்வு வாரியம்.
இந்த காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது . எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் ibps.in என்ற இணையத் தளம் சென்று விண்ணப்பிங்கள்.
இப்பணிக்கான முதல்நிலை தேர்வு( ப்ரிலிமினரி தேர்வு ) வரும் டிசம்பர்(2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2020, ஜனவரி 19 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் . அடுத்த வருடம் மார்ச் முதல் வாரத்திற்குள் தேர்வாகும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைக் கொடுக்கப்படலாம்,
தகுதிகுறித்த தகவல்கள்
வயது: தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 20 வயது கடந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருத்தல் வேண்டும். (ர்சர்வ்டு கேட்டகிரிகளில் உயர் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்)
கல்வி: விண்ணப்பதாரர் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருப்பவர்கள் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தங்கள் படிப்பு முடிவு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
விண்ணப்பிப்பது எப்படி :
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in ஐப் செல்லுங்கள்.
ஸ்டேப் 2: முகப்புப் பக்கத்தில், ‘CRP CLERKS-IX க்கு விண்ணப்பிக்க இங்கே' என்பதை கிளிக் செய்யுங்கள்.( ஸ்க்ரோலிங் ஆகிக் கொண்டிருக்கும்)
ஸ்டேப் 3: ‘புதிய பதிவுக்கு இங்கே ’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் 4: கேட்கப்படும் தகவல்களை பொறுமையாய் நிரப்புங்கள்.
ஸ்டேப் 5: உங்கள் புகைப் படங்களை பதிவேற்றுங்கள்
ஸ்டேப் 6 : பணம் செலுத்தி இறுதியாய் சமர்ப்பித்து விடுங்கள்
கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ .600 செலுத்த வேண்டும்.ர்சர்வ்டு கேட்டகிரி தேர்வர்களுக்கு கட்டணம் ரூ .100 மட்டுமே
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வுகளில் 100 மதிப்பெண் அடிப்படையில் ஆங்கிலம், எண் திறன் மற்றும் பகுத்தறிவு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன.