Advertisment

ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசு; பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஐ.ஐ.டி மெட்ராஸ் அழைப்பு

ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசுக்கான விண்ணப்பங்களை தொடங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்; பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
New Update
IIT Madras

ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசுக்கான விண்ணப்பங்களை தொடங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உலகளாவிய நீர் சவாலான ‘ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசுக்கான’ (Stockholm Junior Water Prize) விண்ணப்பங்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐ.ஐ.டி மெட்ராஸ் – IIT Madras) தொடங்கியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras begins application for ‘Stockholm Junior Water Prize’

முக்கியமான நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் இளம் மனங்களின் புதுமையான முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்கு இந்த பரிசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, உலக நீர் வாரத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 25 முதல் 29, 2024 வரை நடைபெறும் ஸ்வீடனில் உள்ள மதிப்பிற்குரிய ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசுப் போட்டியை ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் வாட்டர் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து ஐ.ஐ.டி மெட்ராஸின் சஸ்டைனபிலிட்டி ஸ்கூல் ஆஃப் சஸ்டைனபிலிட்டி வென்ச்சர் ஸ்டுடியோ நடத்துகிறது மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸின் நீர் மேலாண்மை மற்றும் கொள்கைக்கான அக்வாமேப் மூலம் நிதியுதவி செய்கிறது.

பங்கேற்பாளர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, விரிவான திட்ட ஆவணங்களை 30 ஏப்ரல் 2024க்குள் சமர்ப்பிக்கலாம். சிறந்த 25 அணிகள், பாட நிபுணர்களால் கடுமையான செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஸ்டாக்ஹோம் ஜூனியர் தண்ணீர் பரிசுக்கு பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் - https://sjwpindia.in/ 

- முதல் 25 இடங்களிலிருந்து பத்து சிறந்த அணிகளுக்கு தேசிய நீர் சாம்பியன்ஸ் விருது வழங்கப்படும்.

- முதல் 25 அணிகள் ஐ.ஐ.டி மெட்ராஸில் தங்கள் திட்டங்களைக் காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

- தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையில் அர்ப்பணிப்பு காட்டும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

- முதல் 25 அணிகளில் ஒவ்வொன்றும் விளக்கக்காட்சி திறன்களில் பயிற்சி பெற்று SJWP

இந்தியா மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆகியவற்றிலிருந்து சான்றிதழ்களைப் பெறும்.

நீர் மாசுபாடு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சமமற்ற அணுகல், நீர் பற்றாக்குறை, உயர் நிலத்தடி நீர் அழுத்தம், விவசாய நீர் பயன்பாடு, நீர் நிர்வாகம் மற்றும் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நீர் சவால்களைச் சமாளிக்கும் சிறந்த திட்டங்களைக் கவனத்தில் கொள்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment