scorecardresearch

தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு கட் ஆஃப் மார்க் எவ்வளவு தேவை?

தபால் அலுவலகத்தில் 38,926 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?

தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு கட் ஆஃப் மார்க் எவ்வளவு தேவை?

India post recruitment 2022 for 38926 GDS posts previous year cut off details: போஸ்ட் ஆபிஸின் ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன, இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

போஸ்ட் ஆபிஸில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.

தபால் சேவை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000

உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

கட் ஆஃப் எவ்வளவு?

கடந்த ஆண்டு போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு தேர்வானவர்களில் பெரும்பாலானோர் 97 சதவீத மதிப்பெண்களுக்கு பெற்றுள்ளவர்கள். ஒரு சில இடங்களில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதில் பொதுப்பிரிவு, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவுகளுக்கு ஏற்ப மதிப்பெண் சதவீதம் மாறுபடுகிறது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4: குரூப்-4 வி.ஏ.ஓ தேர்வு; முதலில் படிக்க வேண்டிய பாடம் எது?

இதன்மூலம் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது தெரிகிறது. அதேநேரம் கடந்த முறை 20 முன்னுரிமைகள் மட்டுமே தேர்வு செய்ய முடிந்த நிலையில், இந்த முறை சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் பொதுப்பிரிவு மற்றும் சாதிப் பிரிவு வாரியான அனைத்து இடங்களையும் முன்னுரிமையாக கொடுக்கலாம்.

எனவே இந்த முறையும் பத்தாம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கே வேலை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உங்களது சாதிப் பிரிவுக்கு ஏற்ப இந்த மதிப்பெண் சதவீதம் குறையலாம். எனவே குறைவான மார்க் எடுத்தவர்களும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: India post recruitment 2022 for 38926 gds posts previous year cut off details