புதுச்சேரி மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அக்னிவீர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தோ்ச்சி), டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தோ்ச்சி) உள்ளிட்டப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை நேரிலோ தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.