இந்திய கடலோர காவல்படையில் நாவிக் என்ற பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் joincoastguard.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப செயல்முறை ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 19 மாலை 6 மணிக்கு முடிவடையும். மொத்தம் 358 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆன்லைன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். பின்னர், பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அழைக்கப்படுவார்கள்.
வயது: தேர்வர்களின் வயது 18க்கு குறையாமலும், 22-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
யந்திரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாவிக் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு (கணிதம், இயற்பியல் உள்ளடக்கிய பாடங்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.