Jee Main 2021 Exam 3rd Session Update : என்.டி.ஏ ஜே.இ.இ மெயின் 3-ம் கட்ட தேர்வு வரும் ஜூலை 20-ந் தேதி முதல் ஜூலை 25-ந் தேதி வரை நடைபெறும் எள்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரி மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த தேர்வுகள் அடுத்து எப்போது நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன்படி ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று இன்று அறிவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருந்தார்.
அதன்படி இன்று ஜே.இ.இ மெயின் (ஏப்ரல் மற்றும் மே) அமர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜே.இ.இ மெயின் 2021இன் ஏப்ரல் அமர்வு வரும் ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்படும். தொடர்ந்து (மே அமர்வு) இந்த தேர்வின் நான்காவது மற்றும் கடைசி அமர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் தற்போது விண்ணப்பிக்க ஏதுவாக பதிவு சாளரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணரிப்ப விரும்புவோர் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் ஏப்ரல் அமர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று இரவு (ஜூலை 6) முதல் ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம். மே அமர்வு பதிவுகள் ஜூலை 9-12 வரை திறந்திருக்கும். இதில் தேர்வு ஏழுதுவோர் தங்கள் தேர்வு மையங்களையும் மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்து.
இது குறித்து என்.டி.ஏ அளித்த தகவலின்படி, ஜே.இ.இ மெயின் ஏப்ரல் 2021 க்கு மொத்தம் 6.80 லட்சம் பேரும், மே அமர்வுக்கு 6.09 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், ஏப்ரல் மற்றும் மே அமர்வுகளுக்கு விண்ணப்ப சாளரங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஜே.இ.இ மெயின் இன் முதல் அமர்வு கடந்த பிப்ரவரி 23-26 வரை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி அமர்வுக்கு மொத்தம் 6.61 லட்சம் (6,61,776) வேட்பாளர்கள் பதிவு செய்திருந்தனர். பிப்ரவரி அமர்வில் மொத்தம் ஆறு மாணவர்கள் 100 சதவீதம் பெற்றனர்.
ஜேஇஇ மெயின் 2021 (மார்ச்): இரண்டாவது அமர்வு மார்ச் 15 முதல் 18 வரை நடத்தப்பட்டது. மொத்தம் 6.19 லட்சம் (6,19,638) வேட்பாளர்கள் மார்ச் அமர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மார்ச் அமர்வில், மொத்தம் 13 பேர் 100 சதவீதம் பெற்றனர என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.