/indian-express-tamil/media/media_files/S9qh9CByDp4QMDmwyH7I.jpg)
கட்டுரையாளர்: சந்தீப் மேத்தா
தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (NIT) கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மைத் தேர்வின் (JEE Main) கீழ் சேர்க்கை என்பது இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் ஆர்வலர்களுக்கும் மிக முக்கியமான மைல்கல்லாகும். 2025 கல்வியாண்டில் எந்தவொரு குறிப்பிட்ட என்.ஐ.டி.,யிலும் சேருவதற்குத் தேவையான மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட என்.ஐ.டி, விரும்பும் பொறியியல் பிரிவு, மாணவரின் சாதிப்பிரிவு மற்றும் அந்த நேரத்தில் நிலவும் போட்டியைப் பொறுத்தது.
ஜே.இ.இ முதன்மை தேர்வு கட் ஆஃப்
ஜே.இ.இ முதன்மை தேர்வு கட்-ஆஃப் என்பது என்.ஐ.டி-களில் சேர ஒரு மாணவர் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, தேர்வின் சிரம நிலை, இடங்கள் கிடைப்பது மற்றும் சாதி அடிப்படையில் செய்யப்படும் சதவீத இட ஒதுக்கீடு ஆகியவை கட்-ஆஃப்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகளாகும். ஒரு விதியாக, ஒவ்வொரு என்.ஐ.டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியல் பிரிவுகளிலும் இறுதி தரவரிசை மூலம் கட்-ஆஃப்கள் அறிவிக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டிற்கான குறிப்பிட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள் தேர்வு நடந்தவுடன் உறுதிப்படுத்தப்படும் என்றாலும், முந்தைய ஆண்டுகளின் தரவு போக்குகள் குறைந்தபட்சம் சில மதிப்பீடுகளை வழங்க முடியும். எனவே 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவில் ஜே.இ.இ முதன்மை தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்ணின் சதவீதம் சுமார் 93.23 சதவீதமாக இருந்தது. எனவே விண்ணப்பதாரர்கள் சேர்க்கை பெறுவதற்கு இந்த கொடுக்கப்பட்ட சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற வேண்டியிருந்தது. இது ஓ.பி.சி பிரிவினருக்கு சுமார் 79.67 சதவீதமாகவும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுகளுக்கு முறையே 60.09 மற்றும் 50.23 சதவீதமாகவும் இருக்கும்.
இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி கட்-ஆஃப் நிர்ணயிக்கப்படுகிறது. ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் பிரிவுகளைச் சேர்ந்த ஒரு விண்ணப்பதாரர் எப்போதும் பொதுப் பிரிவை விடக் குறைவான கட்-ஆஃப் மதிப்பைக் கொண்டிருப்பார். வாரங்கல் என்.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பும் ஓ.பி.சி மாணவரின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் 761 ரேங்க் எடுக்க வேண்டும், அதாவது தோராயமாக 252க்கும் கூடுதலாக மதிப்பெண்களைப் பெற வேண்டும். மறுபுறம், எஸ்.சி மற்றும் எஸ்.டி விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டு விதிகள் மற்றும் இருக்கை ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் மாறுபட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கொண்டுள்ளனர்.
தயாரிப்பு உத்தி
சிறந்த தயாரிப்பு எப்போதும் விருப்பமான என்.ஐ.டி மற்றும் கிளையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
1. தேர்வு முறை: ஜே.இ.இ முதன்மை தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும் முறையைப் புரிந்து கொள்ளுங்கள்.
2. வழக்கமான பயிற்சி: முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை முயற்சிக்கவும் அல்லது மாதிரித் தேர்வுகளை எழுதவும், இதனால் உங்கள் தயாரிப்பில் உள்ள இடைவெளியை அறிய முடியும்.
3. நேர மேலாண்மை: தனிப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட நேர இடைவெளிகளை வைத்திருங்கள் மற்றும் குறிப்பாக பலவீனமான தலைப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
4. தேர்வுக்கான தேதி, முறை மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனியுங்கள்.
2025 ஆம் ஆண்டில் என்.ஐ.டி.,களில் சேர்க்கைக்கு என்ன மதிப்பெண்கள் தேவைப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும், ஜே.இ.இ முதன்மை தேர்வில் உயர் தரவரிசையைப் பெறுவதற்கு உழைத்தால், விரும்பிய என்.ஐ.டி மற்றும் பாடப்பிரிவில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். முழுமையான தயாரிப்பு, ஜே.இ.இ முதன்மைத் தேர்வு முறையைப் பற்றிய பரிச்சயம் மற்றும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றுவது அதை அடைவதற்கான படிகளாகும்.
(ஆசிரியர், ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் மற்றும் வித்யாமந்திர் வகுப்புகளின் இணை நிறுவனர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.