JEE Main 2025; ஏப்ரல் 2-8; ஜே.இ.இ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு

JEE Main 2025; ஜே.இ.இ மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு; ஏப்ரல் 2 முதல் 8 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

author-image
WebDesk
New Update
jee main advanced

JEE Main Session 2 Exam Schdule: தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ முதன்மை அமர்வு 2 தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் ஏப்ரல் 2-9 வரை தொடங்கும். முன்னதாக ஜே.இ.இ முதன்மை அமர்வு 2 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 8 வரை தொடங்க திட்டமிடப்பட்டது.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

ஜே.இ.இ முதன்மைத் தேர்வை தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தும், மேலும் 15 வெளிநாடுகளில் உள்ள இடங்களிலும் தேர்வு நடக்கும். மாணவர்கள் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

ஜே.இ.இ முதன்மை அமர்வு 2 தேர்வு தேதி தாள்

Advertisment
Advertisements

ஏப்ரல் 2, 3, 4, 7: பி.இ (BE) மற்றும் பி.டெக் (B Tech) படிப்புகளுக்கான தாள் 1. இந்த நாட்களில், இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். காலை ஷிப்ட் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும்.

ஏப்ரல் 8: இந்த நாளில் தேர்வு இரண்டாவது ஷிப்ட்டில் மட்டுமே நடைபெறும், அதாவது பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

ஏப்ரல் 9: தாள் 2 காலையில் ஒரே ஷிப்டில் நடைபெறும்.

ஜே.இ.இ முதன்மை அமர்வு ஒன்றில், ஜே.இ.இ முதன்மை 2025 தாள் 1 தேர்வுக்கு பதிவு செய்த 13,11,544 பேரில், 12,58,136 (95.93 சதவீதம்) பேர் தேர்வெழுதினர். பிப்ரவரி 10 ஆம் தேதி மதியம் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட முதல் அமர்வில் 12 கேள்விகள் ஏஜென்சியால் கைவிடப்பட்டன.

முதல் அமர்வுத் தேர்வு அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. ஜே.இ.இ முதன்மை தேர்வு 2025 முதல் அமர்வில் 39 மாணவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை, ஏனெனில் அந்த மாணவர்கள் நியாயமற்ற வழிமுறைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

முதல் அமர்வில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாய் மனோக்னா குதிகொண்டா என்ற ஒரு பெண் மட்டுமே முதலிடம் பிடித்துள்ளார். பெரும்பாலான முதலிடம் பெற்றவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் எஸ்.டி பிரிவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பார்த் செஹ்ரா முதலிடம் பெற்றார், மாற்றுத்திறனாளி பிரிவில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஹர்ஷல் குப்தா முதலிடம் பெற்றார். ஓ.பி.சி பிரிவில், டெல்லியைச் சேர்ந்த தக்ஷ் முதலிடம் பெற்றார், எஸ்.சி பிரிவில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் லோஹியா முதலிடம் பெற்றார்.

தாள் 1 (பி.இ./பி.டெக்.) தேர்வுக்கு பல்வேறு பிரிவுகள் மற்றும் பாலினங்களைச் சேர்ந்த மொத்தம் 13,11,544 பேர் பதிவு செய்தனர். அவர்களில், 4,43,622 பேர் பெண்கள், 1,67,790 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 45,627 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், 42,704 பேர் எஸ்.சி, 13,833 பேர் எஸ்.டி, மற்றும் 1,73,668 பேர் ஓ.பி.சி.

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் JoSAA கவுன்சிலிங் மூலம் என்.ஐ.டி.,கள் (NIT), ஐ.ஐ..ஐ.டி.,கள் (IIIT), GFTIகள் மற்றும் பிற பங்கேற்கும் நிறுவனங்களில் சேர்க்கை பெறுவார்கள். கூடுதலாக, ஜே.இ.இ மெயின் 2025 இல் தகுதி பெற்ற முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced 2025) தேர்வு எழுதும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Jee Main

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: