ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறுவது அவசியம். அத்தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இத்தோ்வை சுமார் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு ஏப். 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி விடைக்குறிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.
2-ம் கட்டத் தேர்வின் முடிவுகள் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் Results for JEE(Main) 2025 Session-2 is LIVE! என இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்து விண்ணப்ப எண், பாஸ்வோர்டு ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், கட்-ஆஃப் மதிப்பெண்கள், தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் 24 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.
ஜேஇஇ மெயின் 2025 முடிவுகள்:
ஜேஇஇ மெயின் 2025 இரண்டாம் கட்ட தேர்வின் முதல் தாளுக்கு மொத்தம் 10,61,840 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 9,92,350 மாணவர்கள் தேர்வை எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 3,140 பேர் இத்தேர்வை எழுதினர். தற்போது இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் முதல் தாளில் மொத்தம் 24 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள்னார். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இடம்பெறவில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் முதல் இடம்பிடித்தவர்களின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தேவ்துத்த மஜ்ஹி என்ற மாணவியும், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சாய் மனோக்னா குதிகொண்டா என்ற இரண்டு மாணவிகள் இடம்பெற்று சாதித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மாணவன்:
மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு அளவில் எஸ். பிரதீஷ் காந்தி என்ற மாணவர் 99.9 மதிப்பெண்களுடன் முதல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
ஜேஇஇ மெயின் 2025 கட்-ஆஃப் மதிப்பெண்கள்:
/indian-express-tamil/media/media_files/2025/04/19/LhU6wH1lHCy8grvJ5Cmb.png)