New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
புறத்தொடர்பு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,592
பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தைகள் வளர்ச்சி/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை படிப்புகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 27,804
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.