கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் தனது பட்ஜெட் உரையின் போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவாக, பெங்களூரு நகர பல்கலைக்கழகம், டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு நகர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்படும் என்று அறிவித்தார்.
இந்த பல்கலைக்கழகத்தை நாட்டிலேயே முன் மாதிரி பல்கலைக்கழகமாக மாற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி. கல்லூரி ஆகியவை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தொகுதிக் கல்லூரிகளாக ஒருங்கிணைக்கப்படும்.
டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2004 – 2009 மற்றும் 2009- 2014 பதவிக் காலத்தில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். தனது பதவிக் காலத்தில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் மன்மோகன் சிங். இவர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்தியாவின் 13வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், நவீன இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர், பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் நிதி சீர்திருத்தங்களில் அவரது பங்கிற்கு பெயர் பெற்றவர். கல்வி, பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் மன்மோகன் சிங்கின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன, மேலும் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்கும் கர்நாடகாவின் முடிவு அவரது ஆளுமைக்கு ஒரு அஞ்சலியாகக் கருதப்படுகிறது.