கரூர் நீதிமன்ற வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு 1412 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

Karur court invites application for Steno Typist jobs apply soon: கரூர் மாவட்ட நீதித்துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

கரூர் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

சுருக்கெழுத்துத் தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படித்தால்… நிச்சயம் வெற்றி உறுதி!

தொழில்நுட்ப கல்வித் தகுதி : 1) தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை (அல்லது) 2) தமிழ் தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் இளநிலை (அல்லது) 3) தமிழ் தட்டச்சு தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும்

1) தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை (அல்லது) 2) தமிழ் சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் இளநிலை (அல்லது) 3) தமிழ் சுருக்கெழுத்துத் தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை

சம்பளம்: ரூ.20,600 – 65,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் – 639007.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: