Advertisment

தமிழ்நாடு வேளாண் பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து; காரணம் என்ன?

ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்; காரணம் இதுதான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kovai TNAU

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற 2024–2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு, சாஃப்ட்வேர் பிரச்சனைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைகழகம் சார்பில் கூறப்படுகிறது.

இளநிலை படிப்பு செப்டம்பரில் முடியும் நிலையில், அந்த மாத இறுதியிலேயே முதுநிலை படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும், மாணவர் சேர்க்கை தாமதமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Agriculture kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment