சென்னை ஐஐடியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேஇஇ தேர்வர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜேஇஇ- 2023 தேர்வர்கள் சென்னை ஐடிடி வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களை பெறும் வகையில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையவழியில் ஜூன் 17, 18 தேதிகளிலும், நேரடியாக ஜூன் 24-ஆம் தேதியிலும் இணைந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் இணைய முகவரியில், ஜூன் 16- ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
பாடநெறி, ஆசிரியர்கள், வளாகச் சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கேள்விகளை இணையதளத்தில் தேர்வர்கள் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களைக் கொண்ட குழுவினர் அவற்றுக்கு பதிலளிப்பர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil