தஞ்சாவூர் ஆவின் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு; ஏப்.10 -ம் தேதி நேர்முகத்தேர்வு.. எந்த பணிக்கு தெரியுமா...?

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
interview

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஏப்ரல் 10-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

Advertisment

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தின் அறிவிப்பு 

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு உயர்தர கால்நடை மருத்துவ சேவைகளை வழங்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஓர் ஆண்டு பணிபுரிய தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ இந்த பணிக்கு விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களது உரிய பட்டப்படிப்பு மற்றும் கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் வருகின்ற ஏப்ரல் 10, 2025 அன்று காலை 11.00 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நேரடி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

கிராமப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கறவை மாடுகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் தரமான கால்நடை மருத்துவ வசதிகள் மிகவும் அவசியமானதாகிறது. இதனை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இந்த கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியின் முக்கிய நோக்கம், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து கால்நடை மருத்துவ உதவிகளையும் வழங்குவதாகும். குறிப்பாக, கறவை மாடுகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல் சேவைகளை வழங்குதல், சினை பரிசோதனை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்குதல், மலடு நீக்க சிறப்பு சிகிச்சைகளை அளித்தல் போன்ற முக்கிய பணிகளை இந்த ஆலோசகர் மேற்கொள்வார். இதன் மூலம், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறன் குறித்து கவலைப்படாமல் பால் உற்பத்தியில் முழு கவனம் செலுத்த முடியும்.

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இந்த பணி நியமனம் குறித்து கூறுகையில், "தரமான கால்நடை மருத்துவ வசதிகள் கிடைப்பதன் மூலம், விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளை சிறந்த முறையில் பராமரிக்க முடியும். இது பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும். எனவே, தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Mayiladuthurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: