2024-ம் ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வில், தங்களது இடங்களை ராஜினாமா செய்ய விரும்பும் மாணவர்களுக்கு, மருத்துவ ஆலோசனை குழு (MCC) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு இளங்கலை (NEET UG) கவுன்சிலிங்கின் சுற்று 1 முடிந்துவிட்ட நிலையில், சுற்று 2 இன்றுடன் (செப்டம்பர் 27) முடிவடைய உள்ளது. இந்த இரண்டு சுற்றுகளின் மூடிவில் 33,890 மாணவர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதல் மற்றும் 2-வது சுற்றில் தேர்வாகி தங்களது இடங்கரள ராஜினாமா செய்ய விரும்பும் மாணவர்களுக்கு, மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தங்களது இடத்தை ராஜினாமா செய்ய விரும்புவோர் அக்டோபர் 1, 2024 க்கு முன் தங்கள் இடங்களை ராஜினாமா செய்யலாம் என்று அறிவித்துள்ளது, மாணவர்களின் பல கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது,
இது குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில், 'பல்வேறு காரணங்களுக்காக தங்கள் சுற்று-1 அல்லது சுற்று-2 இடங்களை ராஜினாமா செய்ய விரும்பும் மாணவர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்படுவது அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கும் தகவல் ஆகும். தனுதியுள்ள மாணவர்கள் தங்களது இடங்களை ராஜினாமா செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் தங்கள் சுற்று-1 அல்லது சுற்று-2 இடத்திலிருந்து வெளியேற விரும்பும் மாணவர்கள் 01.10.2024 மாலை 05:00 மணி வரை அதற்காக விண்ணப்பம் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/QVbn6DTWIFWkzdV6k72W.jpg)
தங்கள் இடங்களை ராஜினாமா செய்ய விரும்பும் மாணவர்களுக்காக மருத்துவ ஆலோசனை குழு முக்கிய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சுற்று-1 –ல் தேர்வானவர்கள், சுற்று-2ல் தரம் உயர்த்தப்படாதவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பு வைப்புத்தொகையை இழக்காமல் தங்கள் இருக்கையை ராஜினாமா செய்யலாம்.
சுற்று-2 இன் புதிதாக ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் இருக்கையில் சேர்ந்திருந்தாலும், இப்போது ராஜினாமா செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பு வைப்புத் தொகையை பறிமுதல் செய்து தங்கள் இடத்தை காலி செய்யலாம்.
சுற்று-2 இல் தரம் உயர்த்தப்பட்ட மாணவர்கள், மேம்படுத்தப்பட்ட இருக்கையில் சேர்ந்த பின்னரும், இப்போது தங்கள் இருக்கையை ராஜினாமா செய்ய விரும்பினால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பு வைப்புத் தொகையை பறிமுதல் செய்து தங்கள் இடத்தை காலி செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் இருக்கையை ராஜினாமா செய்ய ஒதுக்கப்பட்ட கல்லூரியில் அறிக்கை செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ராஜினாமா கடிதம் ஒதுக்கப்பட்ட கல்லூரியால் ஆன்லைனில் (எம்.சி.சி வழங்கிய போர்டல் மூலம்) உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், இல்லையெனில் ராஜினாமா செய்த இடம் 'பூஜ்ய அல்லது வெற்றிடமாக' கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“