Advertisment

IB Jobs 2022; உளவுத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 1671 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய உளவுத்துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 1671 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IB Jobs 2022; உளவுத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 1671 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி பாதுகாவலர் மற்றும் பல்பணி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி பாதுகாவலர் (Security Assistant/Executive (SA/Exe)) மற்றும் பல்பணி உதவியாளர் (Multi-Tasking Staff/General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1671 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: SSC; மத்திய ரிசர்வ் போலீஸில் 24,369 காவலர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

உதவி பாதுகாவலர் (Security Assistant/Executive (SA/Exe))

காலியிடங்களின் எண்ணிக்கை : 1521

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கூடிய மாநிலத்தின் அலுவல் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25.11.2022 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 21700 - 69100

பல்பணி உதவியாளர் (Multi-Tasking Staff/General)

காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கூடிய மாநிலத்தின் அலுவல் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25.11.2022 அன்று 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 18000 - 56900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 1 மணி நேரம் ஆகும்.

இரண்டாம் பகுதி மொழிபெயர்ப்பு கட்டுரை வரைதல். இது 40 மதிப்பெண்களுக்கு 1 நேர கால அளவில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2022

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.50, விண்ணப்பக் கட்டணம் ரூ. 450. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு உண்டு.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment