Advertisment

மிக்ஜாம் புயல் எதிரொலி; அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை எதிரொலி; அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

author-image
WebDesk
New Update
anna university

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை எதிரொலி; அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்தப் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும். தற்போது சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madras University Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment