Nagapattinam Court recruitment 2022 for various posts apply soon: நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை; 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 35, MBC/BC/BCM – 32, OC -30
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno - Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2022 அன்று அதிகப்பட்ச வயது SC/SCA/ST – 35, MBC/BC/BCM – 32, OC -30
சம்பளம் : ரூ. 20,600 – 65,500
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil