/tamil-ie/media/media_files/uploads/2021/10/NEET-4.jpg)
தேசிய தேர்வு முகமை, நீட் 2021 தேர்வின் ஆன்சர் கீயை அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிட்டுள்ளதால், நீட் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளுடன், விண்ணப்பதாரர்கள் எழுப்பிய கேள்விகளும் சரிபார்க்கப்பட்டு, பைனல் ஆன்சர் கீ வெளியிடப்படும். அதன் அடிப்படையிலே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும். பொதுவாக நீட் தேர்வு நடந்து முடிந்த ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் சூழ்நிலையில், இம்முறை இதுவரை தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை என்டிஏ வெளியிடவில்லை.
விண்ணப்பத்தாரர்கள் நீட் தேர்வு முடிவுகளை என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in. காணலாம். தேர்வு முடிவுகளுடன் அகில இந்திய இருக்கை ஒதுக்கீடு தரவரிசை பட்டியலும் வெளியாகும்.
டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)
மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.