Advertisment

10 நாள் முன்பே வெளியான நீட் ரிசல்ட்: மருத்துவ கவுன்சிலிங், விண்ணப்பம் எப்போது?

இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே கடந்த 4-ம் தேதி மாலையில் வெளியானது.

author-image
WebDesk
New Update
neet reg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள், கால்நடை படிப்கள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளில் சேர மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை மூலம் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வு (நீட்) கட்டாயமாகும். 

Advertisment

ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு 2024-25 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும்  என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே கடந்த  4-ம் தேதி மாலையில் வெளியானது. 

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மக்களவை வாக்கு எண்ணிக்கை நாள் இரவு வெளியானது. இந்நிலையில், அடுத்த கட்டமாக மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, கவுன்சிலிங் எப்போது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த வாரத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, கவுன்சிலிங் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் விண்ணப்பம் தொடங்கிய பிறகு அதற்கு ஏற்ப மாநில அளவிலான கவுன்சிலிங் நடைமுறை தொடங்கப்படும் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

    NEET Exam
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment