Advertisment

நீட் விவகாரம்: மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க உயர் மட்ட குழு அழைப்பு

தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் செயல்முறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்ன? மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசின் உயர் மட்ட குழு அழைப்பு

author-image
WebDesk
New Update
neet leak issue

பிரதிநிதித்துவ எக்ஸ்பிரஸ் புகைப்படம் (பூபேந்திர ரானா)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான அரசு நியமித்த உயர்மட்டக் குழு, தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுகளை நடத்தும் செயல்முறையை சீர்திருத்த பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை கோரியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

மாணவர்கள், பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான innovateindia.mygov.in/examination-reforms-nta/ ஐப் பார்வையிடுவதன் மூலம் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை தங்கள் பரிந்துரைகள், பார்வைகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான யூ.சி.ஜி (UGC) தேசிய தகுதித் தேர்வுகளில் (NET) முறைகேடுகள் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் ஜூன் 22 அன்று அறிவித்தது.

"அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு, தேர்வுச் செயல்பாட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது, தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (NTA) கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ராதாகிருஷ்ணன் கமிட்டியில் அரசு, அரசு அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளனர், தேர்வு செயல்முறையின் பொறிமுறையில் சீர்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (NTA) கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை வழங்குகின்றனர். .

பீகார், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வின் வினாத் தாள் கசிவு மற்றும் பிற முரண்பாடுகளால் தேசிய தேர்வு முகமை கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவு அச்சம் காரணமாக தேசிய தேர்வு முகமையும் யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் யு.ஜி.சி நெட் ஆகிய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment