Advertisment

NEET UG 2023: நீட் தேர்வு எழுதிய 12,997 அரசு பள்ளி மாணவர்களில் 3,982 பேர் தகுதி; தேர்ச்சி விகிதம் 4% அதிகரிப்பு

நீட் தேர்வு; தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் தகுதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET

நீட் தேர்வு

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளனர்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முடிவுகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் டாப் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: NEET UG: நீட் தேர்வில் இயற்பியல், வேதியியலுக்கு முன்னுரிமை; டை பிரேக்கிங் விதிகளில் புதிய மாற்றங்கள்!

அதேநேரம் தமிழகத்தில் இருந்து தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4% தேர்ச்சி சதவீதம் அதிகமாகும். குறிப்பாக சேலத்தில் 2,007 மாணவர்களில் 519 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இருப்பினும், சரியான பயிற்சி இல்லாததால் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு 296 மாணவர்களில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், முதலிடம் பெற்றவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 268 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர தகுதியுடையவர்கள். ஆனால், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு கடுமையான போட்டி இருப்பதால், மாணவர்கல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி உள்ளது. உதாரணமாக, 346 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவு மாணவருக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு அரசுக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது.

இந்தநிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத முடிவெடுத்துள்ளனர். நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வில் விடையளிக்க போதிய நேரம் கிடைக்கவில்லை. மேலும், தேர்வுக்கு தயாராக கால அவகாசம் போதுமானதாக இல்லை. ஒரு வருடம் தயார் செய்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும். எனவே அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புவதாக மாணவர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதிகமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு, நீட் பயிற்சியை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பல கல்வி வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் இப்போது ஜூன் மாதம் நீட் பயிற்சி தொடங்க திட்டமிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். சில பள்ளிகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வல்லுனர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment