/indian-express-tamil/media/media_files/cQtRYW8FmhT4lIlnSpDx.jpg)
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு முடிவுகள் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில், 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 4 மதிப்பெண்களை இழக்க நேரிடுகிறது.
மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக டாப்பர்கள், தேர்வு நடைமுறைகளில் குளறுபடி, மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றாலும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறி மறுதேர்வுக்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மற்றொரு வழக்கில், இயற்பியல் பகுதியில், ஒரு கேள்விக்கான விடையை ஐ.ஐ.டி டெல்லி நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆப்ஷன் 4 என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, இந்த விடைக்கு ஏற்ப தேர்வு முடிவுகளில் மாற்றங்களைச் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் 4 மதிப்பெண்களை இழக்கின்றனர். இதனால் இவர்களின் தரவரிசையிலும் மாற்றம் இருக்கும். மேலும் 44 டாப்பர்களின் மதிப்பெண்களும் 715 ஆக மாற்றியமைக்கப்படுகிறது. இவர்களின் தரவரிசையிலும் சரிவு ஏற்படும்.
இந்தநிலையில், இந்த வார இறுதிக்குள் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.