Advertisment

NEET UG: நீட் மறுதேர்வில் இயற்பியல் கடினம்; மாணவர்கள், நிபுணர்கள் கருத்து

நீட் மறுத்தேர்வு; வேதியியல், உயிரியல் ஆவரேஜ், இயற்பியல் சற்று கடினம்; மாணவர்கள் – நிபுணர்கள் கருத்து

author-image
WebDesk
New Update
Neet fra.jpg

நீட் மறுத்தேர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீட் தேர்வில் (NEET UG) கருணை மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நடத்த மறுதேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

Advertisment

ஜூன் 23, 2024 அன்று, நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வை நடத்தியது. முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் மதிப்பெண்களை வைத்துக்கொள்ளலாம் அல்லது இந்த மறுதேர்வு மூலம் அவற்றை மேம்படுத்த முயற்சிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், நீட் மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி பிற்பகல் 2:00 முதல் மாலை 5:20 வரை நடைபெற்றது. நீட் மறுதேர்வு மே 5 அன்று நடந்த அசல் தேர்வை பாதித்த தொழில்நுட்ப சிக்கல்களைத் தொடர்ந்து நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. 

நீட் மறுதேர்வு ஏழு வெவ்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது: சத்தீஸ்கரில் உள்ள பலோட் மற்றும் தண்டேவாடா, அதே போல் பஹதுர்கர், சண்டிகர், மையங்களிலும் ஹரியானா, மேகாலயா மற்றும் சூரத்.

நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30 அன்று அறிவிக்கப்படும், நீட் கவுன்சிலிங் அமர்வுகள் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கும். 

நீட் மறுதேர்வு ஆவரேஜ் அளவில் இருந்து சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

நீட் மறுதேர்வின் இயற்பியல் பிரிவு, எண்ணியல் சார்ந்த கேள்விகளுடன் மிகவும் கடினமானதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் இயக்கவியல், மின்காந்தவியல், ஒளியியல் மற்றும் நவீன இயற்பியல் ஆகியவற்றிலிருந்து கேட்கப்பட்டன.

இயற்பியல், கரிம மற்றும் கனிம வேதியியல் ஆகியவற்றின் சமநிலையான கலவையுடன் வேதியியல் பிரிவு ஆவரேஜ் முதல் சற்று கடினம் வரையிலான அளவில் இருந்தது. "ஆர்கானிக் கெமிஸ்ட்ரி: சில அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நுட்பங்கள்" என்ற தலைப்பில் அதிக வெயிட்டேஜ் இருந்தது.

உயிரியல் பிரிவு மிக எளிதாக இருந்தது. உயிரியலில், தாவரவியல் பிரிவு விலங்கியல் பிரிவை விட கடினமாக இருந்தது, இது முக்கியமாக 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. பெரும்பாலான கேள்விகள் மனித உடலியலில் இருந்தன, அதே நேரத்தில் சூழலியல் பிரிவில் மிகக் குறைந்த கேள்விகள் இருந்தன. விலங்கியல் பிரிவு ஆவரேஜ் அளவில் இருந்தது, சுமார் 30 சதவீத கேள்விகள் கடினமாக இருந்தன. இப்பிரிவில் முக்கியமாக விலங்கு பராமரிப்பு, உயிரி தொழில்நுட்பம், மனித இனப்பெருக்கம் மற்றும் உயிர் மூலக்கூறுகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment