Advertisment

நீட் இளங்கலை மறு தேர்வு; 48% பேர் ஆப்சென்ட்: என்ன காரணம்?

நீட் இளங்கலை மறுதேர்வில் 48 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மொத்தம் 1,563 மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை.

author-image
WebDesk
New Update
NEET Bihar.jpg

நீட் இளங்கலை மறு தேர்வில், 48% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் நீட் இளங்கலை மறுதேர்வு நடத்தப்பட்டது. முன்னதாக, நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீட் இளங்கலை மறுதேர்வில் 48 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மொத்தம் 1,563 மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதாவது, ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள இரண்டு மையங்களில் 58.09 சதவீத வருகை பதிவாகியுள்ளதாக தேர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 494 தேர்வர்களில் 287 பேர் மறுதேர்வு எழுதியுள்ளனர்.

நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வுகள் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் முற்றிலும் பாதுகாப்பானவை எனக் கூறியுள்ளனர்.

மேலும், போர்ட்டல்கள் சமரசம் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளையும் அது நிராகரித்தது. மேலும் இந்தக் கூற்றுக்கள் "தவறானவை மற்றும் தவறாக வழிநடத்துகின்றன" என்று கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment