NEET UG 2024 Results: நீட் தேர்வு முடிவுகளால் மாணவர்களுக்கு பாதிப்பு; உடனடியாக ரத்து செய்க – மகாராஷ்டிரா அமைச்சர்

NEET UG 2024 Results: நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைக்கின்றன; தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - மகாராஷ்டிரா அமைச்சர் வலியுறுத்தல்

NEET UG 2024 Results: நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைக்கின்றன; தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - மகாராஷ்டிரா அமைச்சர் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
maharashtra minister hasan

மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், இந்தப் பிரச்சினையில் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து அரசாங்கம் சிந்தித்து வருவதாகக் கூறினார் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - கணேஷ் ஷிர்சேகர்)

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி, அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரியுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

மே 5 அன்று 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET-UG) பல தேர்வர்கள், மதிப்பெண்களின் குளறுபடியால், ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 உட்பட 67 பேர் முதல் தரவரிசையைப் பெறுவதற்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இருப்பினும், தேசிய தேர்வு முகமை (NTA), எந்த முறைகேடு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது மற்றும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்கள் ஆகியவை மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு சில காரணங்கள் என்று கூறியது.

இதுகுறித்து மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் வெள்ளிக்கிழமை பேசுகையில், “நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் மாநிலத்தில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு சேர்க்கைப் பெற மாட்டார்கள் என்பதைத்தான் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்று கூறினார். மேலும், பல மாணவர்களின் பெற்றோர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கோரி தன்னை அணுகியதாகவும் அமைச்சர் கூறினார்.

Advertisment
Advertisements

“இது (நீட் தேர்வு முடிவுகள்) மகாராஷ்டிராவுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது, தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து தேசிய மருத்துவ கவுன்சிலிடம் (NMC) கூற உள்ளோம்,'' என்று அமைச்சர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் மகாராஷ்டிரா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஹசன் முஷ்ரிப் கூறினார்.

நீட் தேர்வு என்பது இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS), இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS), இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS), இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS), மற்றும் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) மற்றும் B.Sc (H) நர்சிங் படிப்புகள் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வாகும். 

நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

இந்த விவகாரத்தில் முன்னதாகவே காங்கிரஸ் கட்சி ஆளும் அரசாங்கத்தை குறிவைத்தது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை மாணவர்களின் "முறையான புகார்களை" விசாரணை மூலம் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், "முதலில் நீட் தேர்வு வினாத் தாள் கசிந்தது, இப்போது அதன் முடிவுகளிலும் மோசடி நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே மையத்தில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவர்கள் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிவருகின்றன,” என்று பிரியங்கா காந்தி கூறினார்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன, என்று பிரியங்கா காந்தி கூறினார், “லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசாங்கம் ஏன் புறக்கணிக்கிறது? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான மாணவர்களின் முறையான கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்,” என்று கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுழைவுத்தேர்வு சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

"வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் அதிக முதலிடம் பெற்றவர்கள், கணித ரீதியாக சாத்தியமில்லாத கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் மதிப்பெண்கள் வழங்குதல் போன்றவை, தற்போதைய மத்திய அரசின் மையப்படுத்தலின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிகழ்வுகள், தொழில்முறைப் பாடத் தேர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறையின் முக்கியத்துவத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன,” என்று ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Maharashtra NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: