Advertisment

நீட் தேர்வு; கோவையில் தீவிர பரிசோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் தவிர வேறு எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லை; கோவையில் தீவிர சோதனைக்குப் பின் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி

author-image
WebDesk
New Update
Kovai NEET centre

கோவையில் தீவிர சோதனைக்குப் பின் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு இன்று (மே 5) நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாநகரில் மொத்தம் 13 மையங்களில் 6500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.

Advertisment

பிற்பகல் 2 மணி அளவில் நீட் தேர்வு துவங்கியது. இத்தேர்வினை எழுத வந்த மாணவர்களை தீவிரமாக பரிசோதனை செய்த பின்பு காவலர்கள் தேர்வு எழுத அனுமதித்து வருகின்றனர்.

ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் மாணவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. 

தேர்வு எழுத வந்த பெண்கள் காதணி, செயின் உள்ளிட்ட நகைகளை அணிவதற்கு அனுமதிக்கவில்லை. அதே போல் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த விதமான மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. 

தேர்வு மையங்களின் வாசலில் காவல்துறையினர் மாணவ மாணவிகளை தீவிரமாக பரிசோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kovai NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment