Advertisment

நீட் தேர்வு சர்ச்சை; ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முதலிடம்; மறுதேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை

நீட் தேர்வு 2024: ஒரே தேர்வு மையத்தில் அடுத்த வரிசை எண்களை உடைய 6 பேர் டாப்பர்கள்; ரிசல்ட் குறித்து கேள்வி எழுப்பும் பெற்றோர்கள்; மறுதேர்வு நடத்தக் கோரும் மாணவர்கள்

author-image
WebDesk
New Update
neet exam center 2024

நீட் தேர்வு 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீட் தேர்வு (NEET UG 2024) முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. முதல் மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள் பெற்றிருப்பது மற்றும் தேர்வு மையங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisment

குறிப்பாக, அகில இந்திய ரேங்க் 1 மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒரே மையத்தில் இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஆர்வலர்கள், கவுன்சிலிங் தொடங்கும் முன், முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அட்டைகளும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன, ஒவ்வொரு நீட் கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும், அப்படி இருக்கையில் 718, 719 மதிப்பெண்கள் எப்படி பெற முடியும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இரண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்துகொண்டு, எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் எழுதினார், "மதிப்பீட்டுத் திட்டங்களை மாற்றவில்லை என்றால், 720-க்கு 718 & 719 மதிப்பெண்களை எப்படிப் பெற முடியும். என்.டி.ஏ-வின் மிகப்பெரிய மோசடி இதுவாக இருக்கலாம்."

தேசிய தேர்வு முகமை ஒரு அறிக்கையில், மே 5 அன்று நேர இழப்பு தொடர்பான கவலைகள் குறித்து, நீட் தேர்வு விண்ணப்பதாரர்களிடமிருந்து சில சட்ட வழக்குகள் மற்றும் சமர்ப்பிப்புகளை பெற்றதாக தெரிவித்தது. 

"2018 ஆம் ஆண்டின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சாதாரணமயமாக்கல் முறையானது, விண்ணப்பதாரர்கள் அனுபவிக்கும் நேர இழப்பை நிவர்த்தி செய்ய இதுபோன்ற வழக்குகள்/ பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டது. எவ்வளவு நேரம் இழந்தது என்பதைத் தீர்மானித்த பிறகு, இந்த விண்ணப்பதாரர்கள் கருணை மதிப்பெண்களைப் பெற்றனர். எனவே, அவர்களின் தரங்களும் 718 அல்லது 719 ஆக இருக்கலாம்" என்று தேசிய தேர்வு முகமையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வினாத் தாள் கசிவுகள், கடைசி நிமிட கருணை மதிப்பெண்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான நீட் முடிவுகளில் உள்ள தவறான தகவல்கள் காரணமாக, மருத்துவ விண்ணப்பதாரர்களில் கணிசமான பகுதியினர் நீட் தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் பற்றிய எந்த வதந்திகளையும் தேசிய தேர்வு முகமை கடுமையாக மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் தவறான தேர்வுத் தாள்கள் குறித்து பரவும் ஆதாரமற்ற வதந்திகளை தேசிய தேர்வு முகமை புறக்கணித்துள்ளது. இந்த அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தேர்வு நடைமுறை பாதுகாப்பாகவும், பாரபட்சமற்றதாகவும் இருந்தது என்றும் என்.டி.ஏ கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment