Advertisment

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் தேர்வு; நிபுணர் குழு முடிவு

நீட் தேர்வில் 1563 மாணவர்கள் கருணை மதிப்பெண்கள் பெற்ற விவகாரம்; குறிப்பிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த நிபுணர் குழு முடிவு

author-image
WebDesk
New Update
neet expert committee

நீட் தேர்வில் 1563 மாணவர்கள் கருணை மதிப்பெண்கள் பெற்ற விவகாரம்; குறிப்பிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த நிபுணர் குழு முடிவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Deeksha Teri

Advertisment

தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 23 அன்று 1563 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, (NEET UG) 2024ஐ மீண்டும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தது போல், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இப்போது இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும், ஒன்று கருணை மதிப்பெண்கள் இல்லாமல், தங்களுக்கு முதலில் வழங்கப்பட்ட மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வது அல்லது ஜூன் 23 அன்று மீண்டும் தேர்வில் பங்கேற்கலாம். “தேர்வு அதே ஆறு நகரங்களில் நடத்தப்படும் ஆனால் வெவ்வேறு மையங்களில் நடத்தப்படும்,” என்று ஒரு மூத்த தேசிய தேர்வு முகமை அதிகாரி indianexpress.com இடம் கூறினார்.

இதையே தேசிய தேர்வு முகமை இன்று உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தது.

தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமையன்று ஒரு குழுவை உருவாக்கியது, இது இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியபோது ஏற்பட்ட "நேர இழப்பை" ஈடுசெய்ய "கருணை மதிப்பெண்கள்" வழங்கப்பட்ட 1,563 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நார்மலைசேஷன் கொள்கையை மதிப்பாய்வு செய்தது. இந்த குழுவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலிருந்து ஒரு உறுப்பினர், தேசிய திறந்தநிலை பள்ளிகள் நிறுவனத்திலிருந்து ஒருவர் மற்றும் இரண்டு யூ.பி.எஸ்.சி (UPSC) உறுப்பினர்கள் இருந்தனர். நேர இழப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கீழ்கண்ட ஆறு மையங்களைச் சேர்ந்தவர்கள்: சத்தீஸ்கரில் இரண்டு (பலோட் மற்றும் தண்டேவாடாவில் தலா ஒன்று), மேகாலயா, சூரத், ஹரியானாவின் பஹதுர்கர் மற்றும் சண்டிகரில் தலா ஒன்று. 

ஜூன் 4 வரை மாணவர்கள் எழுப்பிய இதுபோன்ற புகார்களை சிறப்புக் குழு ஆராயும் என்று தேசிய தேர்வு முகமை கூறியது. 

நார்மலைஷேசன் செயல்முறை என்ன?

யு.பி.எஸ்.சி.,யின் முன்னாள் தலைவர் மற்றும் மூன்று கல்வியாளர்கள் தலைமையிலான இந்தக் குழு, கிளாட் (CLAT) தேர்வில் இதேபோன்ற சம்பவம் தொடர்பாக 2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தேசிய தேர்வு முகமையால் எடுக்கப்பட்ட நார்மலைஷேசன் சூத்திரத்தின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மொத்தம் 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று இப்போது முடிவு செய்துள்ளது.

கிளாட் 2018 தேர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நார்மலைஷேசன் சூத்திரம், இழந்த நேரம் மற்றும் விடையளிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவரின் மதிப்பெண்ணை சரிசெய்தது.

தேசிய தேர்வு முகமையும் இதே நடைமுறையைப் பின்பற்றியது மற்றும் 1563 மாணவர்களுக்கு நேர இழப்பிற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் படி, அத்தகைய விண்ணப்பதாரர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் -20 முதல் 720 மதிப்பெண்கள் வரை மாறுபடும். இவற்றில், இழப்பீட்டு மதிப்பெண்கள் காரணமாக இரண்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் முறையே 718 மற்றும் 719 மதிப்பெண்களாக மாறியது.

வெவ்வேறு நாட்களில் தேர்வு நடைபெறும் ஜே.இ.இ (JEE) முதன்மை தேர்வு மற்றும் CUET போன்ற சில நுழைவுத் தேர்வுகளுக்கு தேசிய தேர்வு முகமை பொதுவாக நார்மலைஷேசன் மதிப்பெண்களைப் பயன்படுத்துகிறது. எவ்வாறாயினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நார்மலைஷேசன் சூத்திரம் பொதுமக்களின் பார்வைக்கு முன்பே வழங்கப்படுகிறது. அதேநேரம் அனைத்து விண்ணப்பதாரருக்கும் ஒரே நாளில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், நீட் தேர்வின் எதிர்கால தகவல் புல்லட்டின்களில் இந்த விதிமுறையை சேர்க்க முயற்சிப்பதாக தேசிய தேர்வு முகமை இப்போது கூறியுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கம் சமூக ஊடகங்களில் மாணவர்கள் முன்னிலைப்படுத்தியதாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் முரண்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணையைக் கோரிய சிறிது காலத்திலேயே இந்த அறிவிப்பு வந்தது.

எளிதான வினாத்தாள் உட்பட டாப்பர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குப் பின்னால் உள்ள பல காரணிகள்

ஜூன் 4 அன்று வெளியிடப்பட்ட முடிவுகள் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் (720/720) பெற்றது, பத்து நாட்களுக்கு முன்னதாக முடிவு அறிவிப்பு, வினா தாள் கசிவு என்று கூறப்படுதல் மற்றும் சில மாணவர்களுக்கு நேர இழப்பிற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன, இதனால் அவர்களின் மதிப்பெண்கள் 718 மற்றும் 719 ஆனது உள்ளிட்ட சில சிக்கல்களை எழுப்பியது. இந்தச் சிக்கல்கள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் சில நீட் தேர்வு நிபுணர்கள்/ ஆசிரியர்களால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டன.

பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, கருணை மதிப்பெண்கள், நேர விரயம் மற்றும் எளிதான கேள்வி போன்ற காரணங்களால் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை பலமுறை கூறியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் சிங் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான முதல் தரவரிசையாளர்களுக்குக் காரணம் இந்த வினாத்தாள் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது தான் என்று கூறினார்.

நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை. 2019 முதல், நீட் தேர்வின் எந்த வருடத்திலும் மூன்றுக்கு மேல் முதலிடம் பெற்றவர்கள் இல்லை, நீட் தேர்வு நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்புகளின் சேர்க்கைக்கான ஒரே நுழைவாயிலாகும். 2019 மற்றும் 2020ல் தலா ஒருவர் முதலிடம் பிடித்தார். 2021ல் மூன்று பேர், 2022ல் ஒருவர், கடந்த ஆண்டு இருவர் முதலிடம் பிடித்தனர். 

17 + 6 + 44 = அதிக எண்ணிக்கையிலான டாப்பர்கள்

17 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்றதாகவும், 1,563 விண்ணப்பதாரர்களில் ஆறு மாணவர்களுக்கு ‘கிரேஸ் மார்க்’ வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை கூறுகிறது.

இது தவிர, மொத்தம் 44 மாணவர்கள் இயற்பியல் கேள்விக்கு தவறான விடை குறிப்பு இருந்து, கருணை மதிப்பெண்கள் பெற்றதால் முதலிடம் பெற்றனர். தேசிய தேர்வு முகமையின் படி, அணுக்கள் பற்றிய இயற்பியல் கேள்வி பழைய NCERT புத்தகத்தில் தவறான அறிக்கையைக் கொண்டிருந்தது. இருப்பினும், மே 29 அன்று, தேசிய தேர்வு முகமை அதன் தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது, இது விருப்பம் 1 சரியானது என்பதைக் காட்டுகிறது, மேலும் 13,373 மாணவர்களால் தேசிய தேர்வு முகமை பதில் பழைய NCERT புத்தகங்களுடன் பொருந்தவில்லை என்று கூறப்பட்டது. வினாத்தாள் புதிய என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது.

இந்த முடிவு 44 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை 715 இல் இருந்து முழுமையான 720 ஆக உயர்த்தியுள்ளது, இது இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான நீட் டாப்பர்களில் அவர்களை உருவாக்கியது.

இந்த இரண்டு கூடுதல் காட்சிகளின் காரணமாக, மொத்த டாப்பர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, முதலில் 17 மாணவர்கள் முதலிடம் பெறுவார்கள் என்று நம்பப்பட்டது, இதில் 6 மாணவர்கள் நேர இழப்பின் கருணை மதிப்பெண்களால் சேர்க்கப்பட்டனர் மற்றும் 44 மாணவர்கள் தவறான இயற்பியல் கேள்வியால் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஆண்டு, நீட் தேர்வுக்கு அதிகபட்சமாக 23.81 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர், இது கடந்த ஆண்டு 20.87 லட்சம் பதிவுகளை விட அதிகமாகும். தேசிய தேர்வு முகமை பகிர்ந்த தரவுகளின்படி, மொத்தம் 9.96 லட்சம் மாணவர்கள் மற்றும் 13.32 லட்சம் மாணவிகள் மற்றும் 17 திருநங்கைகள் தேர்வெழுதினர்.

முழுமையான 720 மதிப்பெண்களைப் பெற்ற 67 மாணவர்களில், பெரும்பான்மையானவர்கள் ராஜஸ்தான் (11), அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (8), மகாராஷ்டிரா (7) மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தலா நான்கு பேர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment