/indian-express-tamil/media/media_files/2025/05/04/rma1rYM56uz5K3Kro4dX.jpg)
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
இந்தியா முழுவதும் சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நீட் தேர்வு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5453 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 720.
இந்த நீட் தேர்வு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
-
May 04, 2025 21:54 IST
நீட் தேர்வு வினாத்தாள் கடினம்; பதிலளிக்க அதிக நேரம் எடுத்தது - நிபுணர்கள் கருத்து
இந்த ஆண்டு நீட் யுஜி தேர்வில் சிரமம் கடுமையாக உயர்ந்துள்ளது. மாணவர்களும் நிபுணர்களும் சமீபத்திய ஆண்டுகளை விட இது அதிக நேரம் எடுக்கும் என்று ஒப்புக்கொண்டனர். இயற்பியல் மற்றும் வேதியியல் மிகப்பெரிய சவால்களை முன்வைத்தன.
-
May 04, 2025 21:37 IST
நீட் தேர்வு: இயற்பியல் பாடத்தில் கடினமான கருத்து சார்ந்த கேள்விகள்
நீட் யுஜி 2025 இல் இயற்பியல் பகுதி சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கடினமான ஒன்றாகும் என்பதை மாணவர்களும் நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆய்வறிக்கையில் வலுவான சிக்கல் தீர்க்கும் திறன்கள் தேவைப்படும் ஆழமான கருத்தியல் மற்றும் எண் ரீதியாக தந்திரமான கேள்விகள் இருந்தன.
-
May 04, 2025 20:31 IST
நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவது கடினம் - நிபுணர்கள் கருத்து
ஒட்டுமொத்தமாக வினாத்தாள் கடினமாக இருப்பதாலும், கோவிட்-க்கு முந்தைய முறை மீண்டும் வந்ததாலும், கடந்த கால நீட் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது மாணவர்கள் அதிக சதவீதத்தில் மதிப்பெண் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
May 04, 2025 20:15 IST
நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்த கிறிஸ்தவ நிர்வாகம்
நெல்லையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் ஓய்வெடுப்பதற்காக கிறிஸ்தவ பேராலயத்தை திறந்து வைத்த நிர்வாகம். நெல்லை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். காலையில் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களது பெற்றோர், கடும் வெயிலில் வெளியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஓய்வெடுப்பதற்காக அருகில் உள்ள தேவாலயத்தை அதன் நிர்வாகிகள் திறந்து விட்டு அவர்களுக்கு மின்விசிறிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். இதனால் ஏராளமான பெற்றோர்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் 3 மணி நேரத்தை அமைதியாக கழித்தனர்.
-
May 04, 2025 20:06 IST
மாணவர்களைக் குழப்பிய பல சரியான பதில்களைக் கொண்ட கேள்விகள்
வேதியியலில் பல சரியான அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் மீண்டும் வந்தது பல மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தக் கேள்விகளுக்கு கூடுதல் வாசிப்பு மற்றும் விமர்சன சிந்தனை தேவைப்படுகிறது, இது தேர்வின் போது நேர அழுத்தத்தை அதிகரித்தது.
-
May 04, 2025 20:05 IST
கடந்த ஆண்டை விட கடினமாக இருந்த இயற்பியல் - தேர்வர்கள்
இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் சிரமம் தெளிவாக அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவிக்கிறது. கேள்விகள் நீளமாக இருந்தன, கருத்தியல் தெளிவு மற்றும் பயன்பாடு சார்ந்த பகுத்தறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
-
May 04, 2025 20:03 IST
அனைத்துப் பிரிவுகளிலும் நேர அழுத்தம் குறித்து ப் மாணவர்கள் புகார்
அனைத்து பாடங்களிலும் - குறிப்பாக உயிரியல் மற்றும் வேதியியல் - கேள்விகள் நீளமாக இருந்ததால், ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தாளை வசதியாக முடிப்பதில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
-
May 04, 2025 19:41 IST
விரிவாக கேட்கப்பட்ட உயிரியல்; ஆனால் ரொம்ப சிக்கல் இல்லை
உயிரியல் உள்ளடக்கம் அடிப்படையில் கடினமாக இல்லாவிட்டாலும், கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் நீளம் நேரத்தை எடுத்துக்கொள்ளும். பல மாணவர்கள் இறுதி கேள்விகளை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது.
-
May 04, 2025 19:38 IST
திருப்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் இருந்த பட்டன்களை அகற்றிய சம்பவம்; எஸ்.எஃப்.ஐ போராட்டம்
திருப்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் இருந்த பட்டனை அகற்றிய சம்பவம் உள்ளிட்ட மாணவர்களை அலைக்கழிக்கும் நிகழ்வுகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். சாலையில் அமர்ந்து முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
May 04, 2025 19:27 IST
நீட் தேர்வு இயற்பியல் கடினம் – மாணவர்கள் கருத்து
நீட் தேர்வில் இயற்பியல் பகுதி 2019 ஆம் ஆண்டு வினாத்தாளை விட கடினமாக இருந்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் 2019 ஆம் ஆண்டு இயற்பியல் பகுதி கடினமானதாக கருதப்படுகிறது
-
May 04, 2025 19:13 IST
நீட் தேர்வு கட் ஆஃப் குறைய வாய்ப்பு – நிபுணர் கருத்து
நீட் தேர்வு சற்று கடினமாக இருப்பதால், இந்த ஆண்டு கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
-
May 04, 2025 18:10 IST
அதிக நேரம் எடுத்துக் கொண்ட உயிரியல்
உயிரியியல் பகுதி இயற்பியல், வேதியியலை விட சற்று எளிதாக இருந்தாலும், கேள்விகள் நீளமானதாக இருந்தது. இதனால் பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் உயிரியல் பகுதியை விரைவாக முடிக்க முடியவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
-
May 04, 2025 18:10 IST
அதிக கால்குலேஷன் கேள்விகளால் இயற்பியல் கடினம்
இயற்பியல் பகுதியில் கணக்கீடு அதாவது கால்குலேஷன் தேவைப்படும் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கால்குலேஷன் செய்ய வேண்டியிருந்தது. 5 கேள்விகளே நேரடியாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இதனால் விடையளிக்க கடினமாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
-
May 04, 2025 18:09 IST
நேரடி கேள்விகள் இல்லாத வேதியியல்
வேதியியல் பகுதி வினாக்களில் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகள் குழப்பமாக கடினமாக கேட்கப்பட்டிருந்தன. வேதிச் சமன்பாடுகளில் தனிமங்கள் மாற்றம் செய்யப்பட்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. நேரடி கேள்விகள் இல்லாததால் பதிலளிக்க சற்று சிரமமாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
-
May 04, 2025 18:08 IST
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் இருந்த பட்டனை அகற்றிய விவகாரம்; எஸ்.எஃப்.ஐ ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் இருந்த பட்டனை அகற்றிய விவகாரத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
May 04, 2025 17:26 IST
நீட் தேர்வு மையத்தில் மாணவர்களின் புனித நூலை அகற்றியதற்கு பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு
கலபுராகியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் மாணவர்களின் புனித நூலை அகற்றியதற்கு பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏப்ரல் 16 அன்று பொறியியல் மற்றும் பிற தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வின் போது இதேபோன்ற ஒரு சம்பவத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பிராமண சிறுவர்களின் புனித நூலும் அகற்றப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உட்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, பிராமண தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு புனித நூலை அகற்றும்படி கேட்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான சமூகத்தினர் நீட் தேர்வு மையத்திற்கு வெளியே கூடி, கோஷங்களை எழுப்பி, உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
May 04, 2025 17:22 IST
நீட் தேர்வு சற்று எளிதாக இருந்தது – மாணவர்கள் முதற்கட்ட கருத்து
நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் முதற்கட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர்
-
May 04, 2025 17:16 IST
நீட் தேர்வு நிறைவு; தேர்வு மையத்திலிருந்து வெளியில் வரும் மாணவர்கள்
நீட் தேர்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்வு மையங்களில் இருந்து மாணவர்கள் வெளியில் வருகின்றனர்
-
May 04, 2025 16:47 IST
நீட் தேர்வு: மயங்கி விழுந்த மாணவிகள்
பாளையங்கோட்டை நீட் தேர்வு மையத்தின் முன்பு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மயக்கம் அடைந்தார். கொத்தமங்கலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற மாணவி திடீரென மயங்கி விழுந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது
-
May 04, 2025 16:27 IST
வேறு மையத்திற்கு சென்று விட்டு தாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற மாணவி
விழுப்புரத்தில் நீட் தேர்வு மையம் தெரியாமல் வேறு மையத்திற்கு சென்று விட்டு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரிக்கு வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1.50 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்ததால் அனுமதிக்க முடியாது என அலுவலர்கள் கண்டிப்புடன் கூறினர். தாமதமாக வந்ததால் தேர்வு எழுத முடியாமல் மாணவி ஏமாற்றத்துடன் சென்றார்
-
May 04, 2025 15:40 IST
ஆதார் அட்டை புகைப்படத்தை மறந்த மாணவர்; ஓடிச்சென்று உதவிய தலைமைக் காவலர்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ஆதார் அட்டை, புகைப்படத்தை மறந்த நிலையில், தலைமைக் காவலர் பாபு சான்றுகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து தேர்வு மைய வளாகத்திற்குள் சென்று மாணவருக்கு கொடுத்து உதவினார்
-
May 04, 2025 15:37 IST
நீட் தேர்வு எழுத தாலியை கழட்டி மனைவியை அனுப்பிய கணவர்
திருவாரூரில் கடைசி நேரத்தில் நீட் தேர்வுக்கு கணவருடன் வந்த மாணவி, தாலியை கழட்டி கொடுத்து விட்டு தேர்வு எழுதச் சென்றார்
-
May 04, 2025 15:35 IST
நீட் தேர்வு: 60 வயதில் மருத்துவர் கனவு
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் பச்சைமால் 60 வயதில் நீட் தேர்வு எழுதுகிறார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.